பழனிசாமியை சந்திப்பதை தொடர்ந்து தவிர்க்கும் செங்கோட்டையன்

சென்னை; பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில், அ.தி.மு.க., - எம்.எல். ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், அ.தி.மு.க., மூத்த தலைவர், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. சட்டசபையில் பழனிசாமியை சந்திப்பதை, அவர் தவிர்த்தார்.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு, கடந்த 9ம் தேதி கோவை அன்னுாரில் பாராட்டு விழா நடந்தது. இந்த விழா அழைப்பிதழ் மற்றும் மேடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை எனக் கூறி, அவ்விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தார்.
அன்றிலிருந்து பழனிசாமி -- செங்கோட்டையன் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் பழனிசாமியை சந்திப்பதை, செங்கோட்டையன் தவிர்த்து வருகிறார்.
வாசகர் கருத்து (2)
Minimole P C - chennai,இந்தியா
15 மார்,2025 - 07:57 Report Abuse

0
0
Reply
S.L.Narasimman - Madurai,இந்தியா
15 மார்,2025 - 07:53 Report Abuse

0
0
Reply
மேலும்
-
கோடை உழவு செய்ய ஹெக்டேருக்கு ரூ.2 ஆயிரம் மானியம்; வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு
-
காரைக்குடியில் பழிக்குப்பழி கொலை செய்ய சதி; ஆயுதங்களுடன் சிக்கிய 4 பேர்
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 சரிவு
-
5 ஆண்டுகளில் 100 புலிகளை கொன்ற பவேரியா கொள்ளை கும்பல்; விசாரணையில் பகீர்
-
பாக்., காஷ்மீர் நிலைப்பாட்டை ஏற்க முடியாது; ஐ.நா.,வில் இந்தியா திட்டவட்டம்
-
ஓய்வு பெற்ற ஆசிரியர் வாழ்க்கையில் விளையாடும் அரசு, பல்கலைக்கழகம்: ஐகோர்ட் நீதிபதி அதிருப்தி
Advertisement
Advertisement