சபாநாயகருடன் செங்கோட்டையன் சந்திப்பு: இ.பி.எஸ்., சொல்வது இதுதான்!

சென்னை: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சபாநாயகரை சந்தித்தது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., 'தி.மு.க., போல் எங்கள் கட்சியில் யாரும் அடிமை கிடையாது' என்றார்.
அடிமை அல்ல!
அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்காதது பற்றியும், சட்டசபையில் சபாநாயகர் அப்பாவுவை செங்கோட்டையன் தனியாக சென்று சந்தித்தது குறித்தும், இ.பி.எஸ்., இடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் கூறியதாவது:
ஏன் சந்திக்கவில்லை என்பதை அவரிடம் (செங்கோட்டையன்) சென்று கேளுங்கள். தனிப்பட்ட பிரச்னைகளை இங்கு பேச வேண்டாம். தி.மு.க.,வினர் போல் அ.தி.மு.க.,வினர் அடிமை அல்ல. அ.தி.மு.க.,வினர் சுதந்திரமாக செயல்படுகிறார்கள். என்றைக்கும் நான் யாரையும் எதிர்பார்ப்பது கிடையாது. நான் சாதாரண தொண்டன். தலைவர் கிடையாது.
எதிரி தி.மு.க., தான்
தி.மு.க.,வை போல் வாரிசு அரசியல் கிடையாது. குடும்ப கட்சி கிடையாது. சர்வாதிகார ஆட்சி கிடையாது. சுதந்திரமாக அனைவரும் செயல்படுகிறோம். நான் யாரையும் அடிமையாக வைத்திருக்கவில்லை. எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க., தான்.
அதை நான் ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டேன். அ.தி.மு.க.,வில் தான் சுதந்திரம் கொடுக்கிறோம்' என இ.பி.எஸ்., பதில் அளித்தார்.
மறுப்பு
இ.பி.எஸ்., கருத்து குறித்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'இது குறித்து பேச வேண்டாம்' எனக் கூறி சென்று விட்டார்.
இன்று சனிக்கிழமை மாலை செங்கோட்டையன் அளித்த பேட்டி:
சபாநாயகரை சட்டமன்ற உறுப்பினர் சந்திப்பது வழக்கம். எனது தொகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு பிரச்னை தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுப்பதற்காக சென்றிருந்தேன். சுற்றுச்சூழல் அமைச்சரும் அங்கே வந்திருந்தார். அவரிடமும் அந்த கடிதத்தை கொடுத்தேன். இன்று கூட ஆறேழு அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகரை சந்திக்க வந்திருந்தனர்.











மேலும்
-
உட்கட்சி பிரச்னையை திசை திருப்பவே நம்பிக்கையில்லா தீர்மானம்; முதல்வர் ஸ்டாலின்
-
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு; கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
-
ரயிலில் கட்டுக்கட்டாக பணம் கடத்தல்: ரூ.13.76 லட்சம் பறிமுதல்
-
பாதுகாப்பு, தகவல் பரிமாற்றம் குறித்து விவாதம்; துளசியுடன் சந்திப்புக்கு பின் ராஜ்நாத் சிங் தகவல்
-
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து
-
பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகள் செல்லாது; அதிபர் டிரம்ப் நடவடிக்கை