'காவல் உதவி' செயலி25,000 பேர் பதிவிறக்கம்
'காவல் உதவி' செயலி25,000 பேர் பதிவிறக்கம்
திருச்செங்கோடு:திருச்செங்கோடு தனியார் கல்லுாரியில், நாமக்கல் மாவட்ட போலீசார் சார்பில், 'காவல் உதவி' செயலியை, 25,000க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவியர் ஒரே நேரத்தில், தொலை
பேசியில் பதிவிறக்கம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் தலைமை வகித்தார். இதில், கல்வி நிறுவனங்களின் முதன்மை அலுவலர் சொக்கலிங்கம் வரவேற்றார். ஏ.டி.எஸ்.பி.,
சண்முகம், டி.எஸ்.பி., கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 'காவல் உதவி' செயலி பல்வேறு அம்சங்களுடன்,
தமிழக போலீசாரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த செயலியை, 25,000 மாணவியர் ஒரே நேரத்தில் பதிவிறக்கம் செய்யும் விதமாக, பல்வேறு காவல்துறை அதிகாரிகள், கல்லுாரி முதல்வர், பேராசிரியர்கள் என, பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
'காவல் உதவி 181' என்ற வடிவத்தில் மாணவியர் அணிவகுத்து நின்று ஒரே நேரத்தில் செல்போனை அசைத்து காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
மேலும்
-
உட்கட்சி பிரச்னையை திசை திருப்பவே நம்பிக்கையில்லா தீர்மானம்; முதல்வர் ஸ்டாலின்
-
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு; கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
-
ரயிலில் கட்டுக்கட்டாக பணம் கடத்தல்: ரூ.13.76 லட்சம் பறிமுதல்
-
பாதுகாப்பு, தகவல் பரிமாற்றம் குறித்து விவாதம்; துளசியுடன் சந்திப்புக்கு பின் ராஜ்நாத் சிங் தகவல்
-
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து
-
பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகள் செல்லாது; அதிபர் டிரம்ப் நடவடிக்கை