குளத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை

பொன்னேரி:பொன்னேரி அடுத்த வெள்ளகுளத்தில், பொன்னேரி - தேவதானம் சாலையை ஒட்டி வளைவு பகுதியில் பொது குளம் அமைந்துள்ளது. குளத்தின் சாலையோர பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளதால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர்.
இந்த வழியாக செல்லும் பள்ளி பேருந்து, தனியார் தொழிற்சாலை பேருந்துகள், தேவதானம் ரங்கநாதர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்கள் விபத்தில் சிக்கும் வாய்ப்புள்ளது.
எனவே, குளத்தையொட்டி உள்ள சாலையோரங்களில் இரும்பு தடுப்புகள் அமைக்கவும், ஒளிரும் ரிப்ளக்டர்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சட்டசபையில் நான் பேசுவதை ஒளிபரப்புவதில்லை; சபாநாயகர் மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த சுனிதா சம்பளம் இவ்வளவு தான்!
-
கேரளாவை வாட்டி வதைக்கும் வெயில்; 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
அமிர்தசரஸ் கோவில் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியவன் சுட்டுக்கொலை; மற்றொருவன் தப்பியோட்டம்
-
பா.ஜ., போராட்டம்; திருமாவளவன் வரவேற்பு
-
அ.தி.மு.க., தீர்மானம் தோல்வி !
Advertisement
Advertisement