பணம் நிறுத்தம் அரிசி வழங்கல்
தங்கவயல்: ரேஷன் கார்டு தாரர்களுக்கு, 5 கிலோ அரிசிக்கு மாற்றாக வழங்கப்பட்ட பணம் நிறுத்தப்பட்டு, மீண்டும் அரிசி வழங்கப்படுகிறது.
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா 5 கிலோ அரிசி இலவசமாக வழங்குவதாக அறிவித்தனர்.
ஆனால், தேவைக்கேற்ப அரிசி கையிருப்பு இல்லாததால், ஐந்து அரிசிக்கு பதிலாக, ஒரு கிலோவுக்கு 37 ரூபாய் வீதம் 185 ரூபாய், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது.
பிப்ரவரி முதல் அறிவிக்கப்பட்ட அரிசி வழங்கப்படுவதால், அதற்கான பணத்தை நிறுத்திவிட்டனர்.
கூடுதலாக ஐந்து கிலோ அரிசி வழங்கும் பணியை தங்கவயலில், தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா துவக்கி வைத்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உட்கட்சி பிரச்னையை திசை திருப்பவே நம்பிக்கையில்லா தீர்மானம்; முதல்வர் ஸ்டாலின்
-
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு; கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
-
ரயிலில் கட்டுக்கட்டாக பணம் கடத்தல்: ரூ.13.76 லட்சம் பறிமுதல்
-
பாதுகாப்பு, தகவல் பரிமாற்றம் குறித்து விவாதம்; துளசியுடன் சந்திப்புக்கு பின் ராஜ்நாத் சிங் தகவல்
-
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து
-
பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகள் செல்லாது; அதிபர் டிரம்ப் நடவடிக்கை
Advertisement
Advertisement