1,000 மீனவ மகளிருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

 தமிழகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை நீர்நிலைகளில், மீன் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில், 12,355 ஏக்கர் ஊராட்சிக் குளங்களில், ெஹக்டேருக்கு 2,000 மீன் குஞ்சுகள் வீதம், ஒரு கோடி மீன் குஞ்சுகள், 7.5 லட்சம் ரூபாய் செலவில் வளர்க்கப்படும்

 பெருகிவரும் அலங்கார மீன் தேவையை நிறைவு செய்து, அதன் வாயிலாக வேலை வாய்ப்பை உருவாக்க, 56 வண்ண மீன் வளர்ப்பு அலகுகள் அமைக்க, 1.55 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்

 மீன் குஞ்சு உற்பத்தி, தீவிர மீன் வளர்ப்பு முறைகள், மதிப்புக் கூட்டுதல் ஆகிய நவீன தொழில்நுட்பங்களில், 1,000 மீனவ மகளிருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், 38 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்

 மீன் வளர்ப்பு, கடற்பாசி வளர்ப்பு, மீன் வியாபாரம் போன்ற சுயதொழில்களை மேற்கொள்ள, 10,000 மீனவர்களுக்கு விவசாய கடன் அட்டைகள் வழங்கப்படும். இதன் வாயிலாக, ஊரகப்பகுதிகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.

Advertisement