டீசல் திருடியதாக டிரைவர் மீது தாக்கு
குஜிலியம்பாறை; ஆலம்பாடி சி.சி. குவாரியை சேர்ந்தவர் லாரி டிரைவர் ரமேஷ் 32. ஜி.எஸ்., இன்ப்ராடெக் கான்ட்ராக்ட் கம்பெனியில் பொலிரோ பிக் அப் வண்டி மூலம் டீசல் போடும் வேலை செய்து வந்தார். பணி முடிந்து குஜிலியம்பாறை மனமகிழ் மன்றத்திற்கு வந்த அவரை உரிமையாளர்கள் சந்தோஷ், கோபிநாத், மேலாளர் மனோஜ் , ஊழியர்கள் முருகேசன், லட்சுமணன் ஆகியோர் கம்பெனிக்கு காரில் அழைத்து சென்றனர்.
அங்கு சென்றதும் எத்தனை நாளாக டீசல் திருடினாய் என கூறி ரமேஷை தாக்கினர். அலைபேசியை வாங்கி கொண்டு கரூர் அரசு மருத்துவமனை அருகே இறக்கி விட்டனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தாக்கிய 5 பேர் மீது குஜிலியம்பாறை எஸ்.ஐ., கலையரசன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உட்கட்சி பிரச்னையை திசை திருப்பவே நம்பிக்கையில்லா தீர்மானம்; முதல்வர் ஸ்டாலின்
-
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு; கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
-
ரயிலில் கட்டுக்கட்டாக பணம் கடத்தல்: ரூ.13.76 லட்சம் பறிமுதல்
-
பாதுகாப்பு, தகவல் பரிமாற்றம் குறித்து விவாதம்; துளசியுடன் சந்திப்புக்கு பின் ராஜ்நாத் சிங் தகவல்
-
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து
-
பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகள் செல்லாது; அதிபர் டிரம்ப் நடவடிக்கை
Advertisement
Advertisement