டீசல் திருடியதாக டிரைவர் மீது தாக்கு
குஜிலியம்பாறை; ஆலம்பாடி சி.சி. குவாரியை சேர்ந்தவர் லாரி டிரைவர் ரமேஷ் 32. ஜி.எஸ்., இன்ப்ராடெக் கான்ட்ராக்ட் கம்பெனியில் பொலிரோ பிக் அப் வண்டி மூலம் டீசல் போடும் வேலை செய்து வந்தார். பணி முடிந்து குஜிலியம்பாறை மனமகிழ் மன்றத்திற்கு வந்த அவரை உரிமையாளர்கள் சந்தோஷ், கோபிநாத், மேலாளர் மனோஜ் , ஊழியர்கள் முருகேசன், லட்சுமணன் ஆகியோர் கம்பெனிக்கு காரில் அழைத்து சென்றனர்.
அங்கு சென்றதும் எத்தனை நாளாக டீசல் திருடினாய் என கூறி ரமேஷை தாக்கினர். அலைபேசியை வாங்கி கொண்டு கரூர் அரசு மருத்துவமனை அருகே இறக்கி விட்டனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தாக்கிய 5 பேர் மீது குஜிலியம்பாறை எஸ்.ஐ., கலையரசன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சட்டசபையில் நான் பேசுவதை ஒளிபரப்புவதில்லை; சபாநாயகர் மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த சுனிதா சம்பளம் இவ்வளவு தான்!
-
கேரளாவை வாட்டி வதைக்கும் வெயில்; 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
அமிர்தசரஸ் கோவில் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியவன் சுட்டுக்கொலை; மற்றொருவன் தப்பியோட்டம்
-
பா.ஜ., போராட்டம்; திருமாவளவன் வரவேற்பு
-
அ.தி.மு.க., தீர்மானம் தோல்வி !
Advertisement
Advertisement