நீர்நிலைகளில் கொட்டப்படும் குப்பையால் சுற்றுச்சூழல் பாதிப்பு! நிலத்தடி நீருக்கும் வேட்டு வைக்கும் மக்கள்

மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர்நிலைகள் அதிகமாக உள்ளன. குளம், கண்மாய்களில் முறையின்றி தொடர்ச்சியாக குப்பை, கட்டட கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இவற்றில் இருந்து மக்கும், மக்காத குப்பையை தனித்தனியாக பிரித்தெடுப்பதில்லை.
கழிவுகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிகமாக உள்ளன. பல இடங்களில் குப்பை பிரித்தெடுக்கப்படாமல் அந்த இடத்திலேயே தீ வைத்தும் எரிக்கப்படுகிறது.
இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. அருகில் குடியிருப்பவர்கள், அந்தப் பகுதியை கடந்து செல்பவர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுகிறது. நீர்நிலைகளில் கொட்டப்படும் குப்பை காற்றில் பறந்து அருகிலுள்ள பகுதி முழுவதும் பரவுகிறது. மழை பெய்யும் போது இப்பகுதிகளை கடந்து செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.
நீர் நிலைகளில் கொட்டப்படும் குப்பை நிலத்தடி நீர்மட்டத்திற்கு பெரும் தீங்கை விளைவிக்கிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை முறையாக செயல்படுத்தி நீர் நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
லஷ்கர் பயங்கரவாதி அபுகுத்தல் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை
-
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உடல்நலக்குறைவு
-
20 ஆண்டுகள் சிவகங்கையில் கொத்தடிமை வாழ்க்கை; மகளைக் கண்டதும் கண்ணீர் விட்டு கதறிய தந்தை
-
அமெரிக்காவில் ஒரே நேரத்தில் சூறாவளி, காட்டுத்தீ; 26 பேர் பரிதாப பலி
-
வளர்ச்சியை நோக்கி இந்தியா, சீனா; உலக நாடுகளில் பொருளாதார பின்னடைவுக்கு வாய்ப்பு: ஐ.நா., அறிக்கை
-
டிராக்டர் மோதி வாலிபர் பலி