தேசிய கருத்தரங்கம்

சாத்துார்; கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரியில் தேசிய அளவிலான என். இ.சி - டெக்பெஸ்ட் 2025 பொறியியல் தொழில்நுட்ப கருத்தரங்கு நடந்தது.

இரு நாட்கள் நடந்த கருத்தரங்கில் 75க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் இருந்து 1700 மாணவர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மொத்தம் ரூ ஒரு லட்சம் பரிசு வழங்கப்பட்டது. கல்லுாரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்கள் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement