ஆபத்தான ஆலமரங்கள் அகற்றம்; உயர்நீதிமன்றத்தில் தகவல்
மதுரை; தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே தமிழகம்-கேரளா தேசிய நெடுஞ்சாலையில் சேதமடைந்துள்ள ஆலமரங்கள் பயணிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ஆய்வில் உறுதியானால் அகற்றப்படும் என என்.எச்.ஏ.ஐ.,தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.
சிவகிரி பகுதியை சேர்ந்த கருணாலய பாண்டியன், தங்கராஜ் தாக்கல் செய்த மனு:
சிவகிரி அருகே சுப்பிரமணியபுரத்தில் குறிப்பிட்ட சர்வே எண்ணில் ஆலமரங்கள் உள்ளன. இவை தமிழகம்- -கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துள்ளன. இவை சேதமடைந்து ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளன. மரங்களை அகற்றக்கோரி கலெக்டர், நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ.,) திட்ட இயக்குனர், திருநெல்வேலி மாவட்ட வன அலுவலருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை இல்லை. பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி வி.லட்சுமிநாராயணன் விசாரித்தார்.
என்.எச்.ஏ.ஐ., தரப்பு: மரங்களை ஆய்வு செய்யுமாறு மாவட்ட வன அலுவலருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. பயணிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டால் சட்ட நடைமுறைகளை பின்பற்றி அம்மரங்கள் அகற்றப்படும்.
இவ்வாறு தெரிவித்தது.
இதை பதிவு செய்த நீதிபதி: ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது. மேலும் உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. வழக்கு பைசல் செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.
மேலும்
-
லஷ்கர் பயங்கரவாதி அபுகுத்தல் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை
-
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உடல்நலக்குறைவு
-
20 ஆண்டுகள் சிவகங்கையில் கொத்தடிமை வாழ்க்கை; மகளைக் கண்டதும் கண்ணீர் விட்டு கதறிய தந்தை
-
அமெரிக்காவில் ஒரே நேரத்தில் சூறாவளி, காட்டுத்தீ; 26 பேர் பரிதாப பலி
-
வளர்ச்சியை நோக்கி இந்தியா, சீனா; உலக நாடுகளில் பொருளாதார பின்னடைவுக்கு வாய்ப்பு: ஐ.நா., அறிக்கை
-
டிராக்டர் மோதி வாலிபர் பலி