எழுத்தாளர் நாறும்பூநாதன் காலமானார்!

தூத்துக்குடி: எழுத்தாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகியுமான நாறும்பூநாதன் காலமானார். இவருக்கு வயது 66.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கழுமலையை சேர்ந்தவர் நாறும்பூநாதன், 66. இவர் கோவில்பட்டியில் ஜி.வி.என் கல்லூரியில் படித்தார். இவர் திருநெல்வேலியில் ஸ்டேட் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். திருநெல்வேலி மாவட்ட செயலாளராக பதவி வகித்துள்ளார்.
இவர், எழுத்தாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகியாகவும் இருந்துள்ளார். இவர் சிறுகதைகள், கட்டுரைகள் என பல்வேறு நூல்களை எழுதி உள்ளார்.
இவரது மனைவி உஷா திருநெல்வேலியில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது மகன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். திருநெல்வேலியில் பொருநை புத்தக கண்காட்சி நடந்த போது, நாறும்பூநாதனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் பின்னர் அவர் வீட்டில் ஓய்வு இருந்து வந்தார்.
இந்நிலையில் இன்று (மார்ச் 16) காலை அவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும்
-
சட்டசபையில் நான் பேசுவதை ஒளிபரப்புவதில்லை; சபாநாயகர் மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த சுனிதா சம்பளம் இவ்வளவு தான்!
-
கேரளாவை வாட்டி வதைக்கும் வெயில்; 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
அமிர்தசரஸ் கோவில் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியவன் சுட்டுக்கொலை; மற்றொருவன் தப்பியோட்டம்
-
பா.ஜ., போராட்டம்; திருமாவளவன் வரவேற்பு
-
அ.தி.மு.க., தீர்மானம் தோல்வி !