ஆட்டோ - கார் மோதல் இருவர் படுகாயம்
திருத்தணி:திருத்தணி, அக்கைய்யநாயுடு சாலையைச் சேர்ந்தவர் முகமது யூசப் மகன் அப்துல் மதின், 45. இவரது நண்பர் சாய்ஜின்னா, 45. இருவரும் நேற்று, ஆட்டோவில் காய்கறிகளை ஏற்றி கொண்டு, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லுாரிக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, சீனிவாசபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது எதிரே வந்த 'டொயோட்டா எத்தேஷ்' என்ற கார் மோதியது. இதில், ஆட்டோவில் வந்த இருவரும் படுகாயமடைந்தனர். அவ்வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேல்சிகிச்சைக்காக பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு; கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
-
ரயிலில் கட்டுக்கட்டாக பணம் கடத்தல்: ரூ.13.76 லட்சம் பறிமுதல்
-
பாதுகாப்பு, தகவல் பரிமாற்றம் குறித்து விவாதம்; துளசியுடன் சந்திப்புக்கு பின் ராஜ்நாத் சிங் தகவல்
-
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து
-
பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகள் செல்லாது; அதிபர் டிரம்ப் நடவடிக்கை
-
சென்னை-மும்பை ஐ பி.எல்., கிரிக்கெட் போட்டி: ரசிகர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
Advertisement
Advertisement