பள்ளி ஆசிரியரை தாக்கிய நால்வர் மீது வழக்கு பதிவு
மப்பேடு:பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ், 26. இவர். மப்பேடு அடுத்த இருளஞ்சேரி பகுதியில் உள்ள சென்மேரீஸ் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 14ம் தேதி பள்ளியில் பணிபுரியும் கீழச்சேரியைச் சேர்ந்த பெண் ஆசிரியர் ஒருவரிடம் பேசி கொண்டு வந்துள்ளார்.
இதை பார்த்த பூவனுாரைச் சேர்ந்த சதீஷ், 24, என்பவர், நண்பர்கள் மூவருடன் சேர்ந்து ராகேஷை வழிமறித்து, 'நீ பேசும் ஆசிரியை என் முன்னாள் காதலி. நீ அவரிடம் பேசக்கூடாது' எனக் கூறி கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் ராகேஷ் அளித்த புகாரின்படி, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து சதீஷ் உட்பட நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சட்டசபையில் நான் பேசுவதை ஒளிபரப்புவதில்லை; சபாநாயகர் மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த சுனிதா சம்பளம் இவ்வளவு தான்!
-
கேரளாவை வாட்டி வதைக்கும் வெயில்; 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
அமிர்தசரஸ் கோவில் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியவன் சுட்டுக்கொலை; மற்றொருவன் தப்பியோட்டம்
-
பா.ஜ., போராட்டம்; திருமாவளவன் வரவேற்பு
-
அ.தி.மு.க., தீர்மானம் தோல்வி !
Advertisement
Advertisement