பள்ளி ஆசிரியரை தாக்கிய நால்வர் மீது வழக்கு பதிவு
மப்பேடு:பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ், 26. இவர். மப்பேடு அடுத்த இருளஞ்சேரி பகுதியில் உள்ள சென்மேரீஸ் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 14ம் தேதி பள்ளியில் பணிபுரியும் கீழச்சேரியைச் சேர்ந்த பெண் ஆசிரியர் ஒருவரிடம் பேசி கொண்டு வந்துள்ளார்.
இதை பார்த்த பூவனுாரைச் சேர்ந்த சதீஷ், 24, என்பவர், நண்பர்கள் மூவருடன் சேர்ந்து ராகேஷை வழிமறித்து, 'நீ பேசும் ஆசிரியை என் முன்னாள் காதலி. நீ அவரிடம் பேசக்கூடாது' எனக் கூறி கட்டையால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் ராகேஷ் அளித்த புகாரின்படி, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து சதீஷ் உட்பட நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு; கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
-
ரயிலில் கட்டுக்கட்டாக பணம் கடத்தல்: ரூ.13.76 லட்சம் பறிமுதல்
-
பாதுகாப்பு, தகவல் பரிமாற்றம் குறித்து விவாதம்; துளசியுடன் சந்திப்புக்கு பின் ராஜ்நாத் சிங் தகவல்
-
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து
-
பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகள் செல்லாது; அதிபர் டிரம்ப் நடவடிக்கை
-
சென்னை-மும்பை ஐ பி.எல்., கிரிக்கெட் போட்டி: ரசிகர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
Advertisement
Advertisement