சூதாட்டம் ஆடிய 8 பேர் கைது ரூ.1 லட்சம், 6 பைக் பறிமுதல்
மணவாளநகர்:மணவாளநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போளிவாக்கம் பகுதியில் சூதாட்டம் நடப்பதாக, மாவட்ட எஸ்.பி.,க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, எஸ்.பி., சீனிவாசபெருமாள் உத்தரவின்படி, சிறப்பு படை போலீசார் நேற்று போளிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பாக்குப்பேட்டை பகுதியில் உள்ள மாந்தோப்பில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தப்பியோட முயன்றனர்.
இதையடுத்து, சிறப்பு படை போலீசார், செங்காடு மணிகண்டன், 33, யாபேஷ், 40, ராஜு, 30, பாபு, 27, நாகராஜ், 35, வரதன், 42, தொடுகாடு பார்த்திபன், 42, அழிஞ்சிவாக்கம் பிரகாஷ், 35 ஆகிய எட்டு பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த மணவாளநகர் போலீசார், 1 லட்சத்து 16 ஆயிரத்து 160 ரூபாய் மற்றும் ஆறு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உண்மையான அக்கறை எனில் டாஸ்மாக் முறைகேட்டில் நடவடிக்கை அவசியம்; த.வெ.க., வலியுறுத்தல்
-
என்னை வழிநடத்திய பகவத் கீதை: துளசி கப்பார்ட் நெகிழ்ச்சி
-
உட்கட்சி பிரச்னையை திசை திருப்பவே நம்பிக்கையில்லா தீர்மானம்; முதல்வர் ஸ்டாலின்
-
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு; கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
-
ரயிலில் கட்டுக்கட்டாக பணம் கடத்தல்: ரூ.13.76 லட்சம் பறிமுதல்
-
பாதுகாப்பு, தகவல் பரிமாற்றம் குறித்து விவாதம்; துளசியுடன் சந்திப்புக்கு பின் ராஜ்நாத் சிங் தகவல்
Advertisement
Advertisement