மாடு குறுக்கே வந்ததால் விபத்து பைக்கில் இருந்து விழுந்தவர் பலி
மப்பேடு:ஒடிசா மாநிலம் கஞ்சாம் பகுதியைச் சேர்ந்தவர் ஷிபா டகுவா, 33. இவர், குடும்பத்தினருடன் மப்பேடு அடுத்த விஸ்வநாதபுரத்தில் தங்கி, மப்பேடில் உள்ள அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.
கடந்த 14ம் தேதி பொருட்கள் வாங்க 'ஸ்பிளண்டர்' இருசக்கர வாகனத்தில், தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, மாடு குறுக்கே வந்ததால், சாலையோர மின்கம்பத்தில் மோதி, சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவலறிந்த மப்பேடு போலீசார், உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் இவரது மனைவி பர்திமா டகுவா அளித்த புகாரின்படி, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு; கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
-
ரயிலில் கட்டுக்கட்டாக பணம் கடத்தல்: ரூ.13.76 லட்சம் பறிமுதல்
-
பாதுகாப்பு, தகவல் பரிமாற்றம் குறித்து விவாதம்; துளசியுடன் சந்திப்புக்கு பின் ராஜ்நாத் சிங் தகவல்
-
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து
-
பைடன் வழங்கிய கடைசி நேர மன்னிப்புகள் செல்லாது; அதிபர் டிரம்ப் நடவடிக்கை
-
சென்னை-மும்பை ஐ பி.எல்., கிரிக்கெட் போட்டி: ரசிகர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
Advertisement
Advertisement