ரயில் மோதி பெண் பலி

திருத்தணி:திருத்தணி அருகே பொன்பாடி ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் அருகே, நேற்று மாலை 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது, அந்த வழியாக வந்த விரைவு ரயில் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அரக்கோணம் ரயில்வே போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி, வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement