பஸ் சக்கரத்தில் சிக்கிய வாலிபர் பலி
செம்மஞ்சேரி:தாழம்பூர், அண்ணாதெருவை சேர்ந்தவர் அன்பு, 25. ஓ.எம்.ஆரில் உள்ள பைக் ஷோரூமில் பணிபுரிந்தார். செம்மஞ்சேரி சுனாமி நகரை சேர்ந்த பிரகாஷ், 28, சுரேஷ், 25. நேற்று காலை, மூன்று பேரும் ஹோண்டா டியோ பைக்கில் நாவலுாரில் இருந்து சோழிங்கநல்லுார் சென்றனர். சுரேஷ் ஓட்டி சென்றார்.
ஓ.எம்.ஆர்., குமரன் நகர் சந்திப்பை கடந்து செல்லும்போது, பின்னால் வந்த மாநகர பேருந்து மோதியதில், மெட்ரோ ரயில் பணிக்காக வைத்திருந்த தடுப்பில் பைக் உரசியது. இதில் நிலை தடுமாறிய அன்பு சாலையில் விழுந்த போது, பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியானார்.
பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார், பேருந்து ஓட்டுநர் திருவல்லிக்கேணியை சேர்ந்த தம்பிதுரை, 54, என்பவரை, கைது செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சட்டசபையில் நான் பேசுவதை ஒளிபரப்புவதில்லை; சபாநாயகர் மீது இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த சுனிதா சம்பளம் இவ்வளவு தான்!
-
கேரளாவை வாட்டி வதைக்கும் வெயில்; 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
-
அமிர்தசரஸ் கோவில் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியவன் சுட்டுக்கொலை; மற்றொருவன் தப்பியோட்டம்
-
பா.ஜ., போராட்டம்; திருமாவளவன் வரவேற்பு
-
அ.தி.மு.க., தீர்மானம் தோல்வி !
Advertisement
Advertisement