பசுவால் விபத்து பைக்கில் சென்றவர் பலி

திருவள்ளூர்: ஒடிசா மாநிலம், கஞ்சாம் பகுதியைச் சேர்ந்தவர் ஷிபா டகுவா, 33. இவர், குடும்பத்தினருடன், திருவள்ளூர் மாவட்டம், விஸ்வநாதபுரத்தில் தங்கி, மப்பேடில் உள்ள அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.

கடந்த 14ம் தேதி பொருட்கள் வாங்க 'ஸ்பிளண்டர்' இருசக்கர வாகனத்தில், தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, மாடு குறுக்கே வந்ததால், சாலையோர மின்கம்பத்தில் மோதி, சம்பவ இடத்திலேயே பலியானார்.

மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement