ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: சி.பி.ஐ., விசாரணை வேண்டும் என்கிறார் அன்புமணி

5

சென்னை: ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று பா.ம.க தலைவர் அன்பு மணி கூறியுள்ளார்.

அன்பு மணி அறிக்கை:

ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் எதிர்த்து நடப்பதாக அறிவிக்கப்பட்ட போராட்டத்துக்கு முன்பே அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

ஊழலுக்கு எதிரான போராட்டங்களைக் கண்டு அரசும் காவல்துறையும் அஞ்சுவது ஏன்? தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடுவதற்கு கூட அனுமதி இல்லையா?

திமுகவினர் ஊழல் செய்யவில்லை என்றால் இத்தகைய அடக்குமுறைகளை கைவிட்டு, டாஸ்மாக் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அன்பு மணி அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement