சுற்றுச்சுவர் இல்லாத கால்நடை மருந்தகம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் அடுத்த, ஆலத்தூர் கிராமத்தில், அரசு கால்நடை மருந்தகம் இயங்கி வருகிறது. இங்கு, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த கால்நடைகளுக்கு, செயற்கை கருவூட்டல், கோமாரி தடுப்பூசி உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த கால்நடை மருந்தகத்தை சுற்றி, சுற்றுச்சுவர் இல்லாமல் உள்ளது. இதனால், இரவு நேரங்களில், 'குடி'மகன்கள் அங்கேயே அமர்ந்து, மது அருந்தி பாட்டில்களை உடைத்து, அங்கேயே போட்டு செல்கின்றனர்.
மேலும், சுற்றுச்சுவர் இல்லாததால், மருந்தகத்திற்குள் பாம்பு உள்ளிட்ட விஷஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
எனவே, கால்நடை மருந்தகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க, கால்நடை பராமரிப்பு துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.1000 கோடி முறைகேடு; நான் தான் போராடணும்; அண்ணாமலை அல்ல என சீமான் சொன்னது இதுதான்!
-
ஒடிசாவில் வாட்டி வதைக்கும் வெயில்: பள்ளி நேரத்தில் மாற்றம்
-
என்.ஐ.ஆர்.எப்., தரவரிசை பட்டியலை வெளியிட தடை; ஐகோர்ட் கிளை உத்தரவு
-
யுடியூப் பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.,யை சேர்ந்தவருக்கு ஏற்பட்ட துயரம்
-
குழந்தைகளின் கற்றல் திறன் அதிகரிப்பு: முதல்வர் ஸ்டாலின்
-
டாஸ்மாக்கில் முதல்வர் படம் : பா.ஜ.,மகளிர் அணி இருவர் கைது
Advertisement
Advertisement