அரசுப்பள்ளியில் ஆண்டு விழா


அரசுப்பள்ளியில் ஆண்டு விழா


பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட நாட்டாகவுண்டன்புதுார் பகுதியில் உள்ள நகராட்சி துவக்க பள்ளியில், நேற்று ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. நகராட்சி தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் பாலமுருகன் ஆகியோர், விளையாட்டு போட்டியில் வெற்ற பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கினர். நகராட்சி கமிஷனர் தயாளன், பொறியாளர் ரேணுகா மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement