தனியார் வேலைவாய்ப்புமுகாம்: 43 பேருக்கு பணி



தனியார் வேலைவாய்ப்புமுகாம்: 43 பேருக்கு பணி


நாமக்கல்:தனியார் துறை நிறுவனங்களும், -தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல் - மோகனுார் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில், நேற்று நடந்தது. மாவட்ட வேலைவாய்பு அலுவலர் ஷீலா தலைமை வகித்தார்.
அதில், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 21 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. மேலும், பணி நாடுனர்கள், 107 பேர் பங்கேற்றனர். அதில், 43 பேர் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனை ஆணை வழங்கப்பட்டது.

Advertisement