அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த வானமாதேவியில் கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
காட்டுமன்னார்கோவில் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் முருகுமாறன், சிதம்பரம் நகர துணை செயலாளர் அரிசக்திவேல் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.
முன்னாள் அமைச்சர் ஜெயபால், வரும் சட்டசபை தேர்தலில் அதிக ஓட்டுகளை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இதேப் போன்று மாமங்கலம், கொண்டசமுத்திரம், ஆண்டிப்பாளையம், கோவிந்தராஜன்பேட்டை, சித்தமல்லி, அறந்தாங்கி, அகரபுத்துார் உள்ளிட்ட கிராமங்களில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், உதயகுமார், அம்பலவாணன், பார்த்திபன், இளங்கோவன், ரஞ்சித்குமார், மாணிக்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
தொகுதி மறுவரையறை விவகாரம்: சட்டத்திருத்தம் கொண்டு வர ஜெகன் ரெட்டி வலியுறுத்தல்
-
தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை எண்ணிக்கையில் இல்லை; அதிகாரத்தில் தான்: முதல்வர் ஸ்டாலின்
-
இன்றைய நாள் வரலாற்றில் பொறிக்கப்படும்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
தமிழகம் முழுவதும் தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., கருப்புக்கொடி போராட்டம்
-
தங்கம் விலை 2 நாட்களில் சவரனுக்கு ரூ.640 சரிவு; ஒரு சவரன் ரூ.65,840!
-
காவிரி ஆரத்தி நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு