கூரை கான்கிரீட் பெயர்ந்த வி.ஏ.ஒ., அலுவலகம்

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம், சாத்தனஞ்சேரி கிராமத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழு கட்டடம் அருகே, கிராம நிர்வாக அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, அப்பகுதியை சேர்ந்தோர் பட்டா, சிட்டா, அடங்கல், முதியோர் உதவித்தொகை, ஜாதி சான்றிதழ் ஆகியவை பெற தினமும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், 20 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட இக்கட்டடம், முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளது. கட்டட கூரையில் கான்கிரீட் பெயர்ந்து உதிர்ந்து இரும்புக் கம்பிகள் வெளியே தெரிகின்றன.
சேதமடைந்த பகுதி, எப்போதும் ஈரத்தன்மையுடன் காணப்படுகிறது. இதனால், அலுவலகத்திற்கு பொதுமக்கள் அச்சத்துடனே வந்து செல்கின்றனர்.
சேதமடைந்துள்ள கட்டடம் இடிந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சேதமடைந்துள்ள வி.ஏ.ஒ., அலுவலக கட்டடத்தை அகற்ற, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement