காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு


காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
அதியமான்கோட்டை:
தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையிலுள்ள காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நேற்று நடந்தது. அதிகாலை, 5:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6:00 மணிக்கு கணபதி ஹோமம், 64 பைரவர் ஹோமம், ஏகாந்த ருத்ர ஹோமம், 8:00 மணிக்கு கோ பூஜை, அஸ்தவ பூஜை, 8.30 மணிக்கு பைரவர் உற்சவமூர்த்தி கோவில் வலம் வருதல், தொடர்ந்து, காலபைரவருக்கு, 18 வகை அபிஷேகங்கள் நடந்தன. வெள்ளி கவச அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.
இரவு, 10:30 மணிக்கு, 1,008 கிலோ மிளகாய், 108 கிலோ மிளகு மூலம், சத்ரு சம்ஹார யாகம், 64 பைரவர் யாகம், நள்ளிரவு, 2:30 மணிக்கு பைரவர் சுவாமி பல்லாக்கில் கோவில் வலம் வருதல், அதிகாலை, 3:00 மணிக்கு, 108 லிட்டர் பால் அபிஷேகம் உள்ளிட்டவை நடந்தது. பக்தர்கள் வெண்பூசணியில் தீபமேற்றி வழிபட்டனர்.
* கிருஷ்ணகிரி அருகே, கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியிலுள்ள காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. தங்கக்
கவச அலங்காரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பகல், 12:00 மணிக்கு, கால பைரவர் உற்சவம், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பெண்கள் பூசணி, தேங்காய் மற்றும் எலுமிச்சையில் விளக்கேற்றி வழிபட்டனர். ஏற்பாடுகளை, 165 கிராமங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Advertisement