திண்டுக்கல் மாவட்ட பா.ஜ., முன்னாள் தலைவர் கைது

பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநியில் அவதுாறாக பேசிய பா.ஜ., மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர் கனகராஜை போலீசார் கைது செய்தனர்.
பழநி பெரியப்பாநகரைச் சேர்ந்த பா.ஜ., மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர் கனகராஜ். இவர் சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவரை கடுமையாக பேசிய ஆடியோ ஒன்று வைரலானது. இதில் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த எல்லைதுரை மனைவி குறித்து கனகராஜ், அவதுாறாக பேசிய வார்த்தைகள் இடம்பெற்றிருந்தது. இதையறிந்த எல்லைதுரையின் மனைவி புவனேஸ்வரி, பழநி தாலுகா போலீசில் புகார் அளித்தார். பெண்ணை மானபங்கம் செய்யும் வகையில் அவதுாறாக பேசுவது, கொலை மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து கனகராஜை கைது செய்தனர்.
நேற்று விசாரணைக்காக கனகராஜை தாலுகா ஸ்டேஷனுக்கு போலீசார் அழைத்து வந்தபோது பா.ஜ.,வினர் திரண்டனர். இதனால் போலீஸ் ஸ்டேஷன் கதவுகள் அடைக்கப்பட்டு யாரும் அனுமதிக்கப்படவில்லை.
மேலும்
-
அனுமதி பெறாமல் பறக்கும் 'ட்ரோன்' போலீசே இனி தரையிறக்கம் செய்யும்
-
செங்கை அரசு பள்ளியில் 53 லேப் டாப் திருட்டு
-
வெள்ளபுத்துாரில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
-
'காலைக்கதிர்' நடத்தும் 'கல்வி வழிகாட்டி' தொடங்கியதுபெற்றோர், மாணவ, மாணவியரால் அரங்கம் நிரம்பியது
-
சில வரி செய்தி...
-
வனத்தில் யானை கொல்லப்பட்ட விவகாரம்விசாரணைக்கு சென்றவர் தற்கொலை முயற்சி