பாதாள சாக்கடை அடைப்பால் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் இருந்து, மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு செல்லும் சாலை பிரிகிறது. இந்த சாலை வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபயிற்சி மேற்கொள்வோரும், விளையாட்டுத்திறனை மேம்படுத்தும் வகையில் பயிற்சியில் ஈடுபடும் விளையாட்டு வீரர்களும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், ரயில்வே சாலையில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, ஒரு மாதத்திற்கும் மேலாக மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு செல்லும் சாலையில் கழிவுநீர் வழிந்தோடி வருவதால், அப்பகுதி பாசி படர்ந்த நிலையில் உள்ளது.
இதனால், இவ்வழியாக செல்வோர் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, ரயில்வே சாலையில் ஏற்பட்டுள்ள பாதாள சாக்கடை அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும்
-
சிறுபான்மை இன மக்களுக்கு தி.மு.க., என்ன செய்தது: அண்ணாமலை கேள்வி
-
புறநகருக்கு மாறும் திஹார் ஜெயில்: டில்லி பட்ஜெட்டில் அறிவிப்பு
-
பிரிமியர் லீக்: டாஸ் வென்ற குஜராத் அணி 'பீல்டிங்'
-
சவுக்கு சங்கர் வீடு மீது தாக்குதல்: பின்னணியில் செல்வப்பெருந்தகை
-
10ம் வகுப்பு அரசு தேர்வு வினாத்தாள் கசிவு: தெலுங்கானாவில் 5 பேர் கைது
-
பாஸ்போர்ட்டை மறந்த விமானி: கிளம்பிய இடத்தில் மீண்டும் தரையிறங்கிய விமானம்