பைக் மீது மின்சாரம் பாய்ந்து 3 பேர் உடல் கருகி பலி; ராஜஸ்தானில் சோகம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அறுந்து கிடந்த உயர்அழுத்த மின் ஒயரில் பைக் உரசியதால், மின்சாரம் தாக்கி 3 பேர் உடல்கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முண்டியாட் - கட்லு சாலையில் கின்சார் எனும் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பிதராம் தேவசி, கல்லுரம் தேவசி மற்றும் ஜெதராம் தேவசி ஆகிய 3 பேரும், நேற்று கட்லு கிராமத்திற்கு ஒரே பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, சாலையில் உயர்மின் அழுத்த ஒயர் அறுந்து கிடந்துள்ளது.
அந்த ஒயர் அவர்கள் சென்ற பைக்கில் உரசியதும், மின்சாரம் பாய்ந்தது. இதனால், பைக்கில் தீப்பற்றி எரிந்தது. இதில், 3 பேரும் சம்பவ இடத்திலேயே பைக்குடன் எரிந்து சாம்பலாகினர்.
இதனை நேரில் பார்த்தவர்கள், மின்சாரத்துறையினருக்கும், போலீசாருக்கும் உடனடியாக தகவல் கொடுத்தனர். அதன்பேரில், மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டது.
மின்சார ஊழியர்களின் அலட்சியத்தால் பரிதாபமாக 3 பேர் உயிரிழந்து விட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதனிடையே, நாகவூர் எம்.பி., ஹனுமன் பெனிவால், உயிரிழந்தவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சம் இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.




மேலும்
-
அதிபர் டிரம்ப் அறிவித்த 'கோல்டு கார்டு' திட்டத்திற்கு அமோக வரவேற்பு
-
கடையநல்லுாரில் மாணவியர் விடுதி: அமைச்சர் உறுதி
-
தெருநாய்களை கட்டுப்படுத்த கருத்தடை மையம் அனைத்து நகரங்களிலும் அமைக்க முடிவு
-
வீட்டில் இருந்த 4 சவரன் நகை மாயம்
-
அரசுக்கு நிதி தட்டுப்பாடு அமைச்சர் வெளிப்படை
-
'ராஜராஜ சோழனுக்கு 100 அடி சிலை'