காசநோய் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

திண்டிவனம்: திண்டிவனத்தில் தனியார் கல்லுாரி மாணவிகள் பங்கேற்ற காசநோய் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
காந்தி சிலை அருகே இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை அரிமா சங்க நிர்வாகி சுந்தரம், கவுன்சிலர் பரணிதரன் சப் இன்ஸ்பெக்டர் அரிராமன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
ஊர்வலத்தில், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சுஷ்மிதா, கல்லுாரி மேலாண் இயக்குனர் பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர். நகரத்தின் முக்கிய வீதிகள வழியாக வந்த ஊர்வலத்தில் பொதுமக்களிடம் காச நோய் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாணவிகள் வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement