தொழில் முன்னேற்றத்துக்காக 108 பால் குடம் எடுத்த பக்தர்கள்

திருப்பூர்; தொழில் முன்னேற்றம் மற்றும் பொதுமக்கள் நலன் வேண்டி, முருகப் பெருமானுக்கு, 108 குடம் பாலாபிேஷகம் செய்விக்கப்பட்டது.
திருப்பூர், நல்லுாரில் உள்ள ஸ்ரீ பாலமுருகன் கந்தசஷ்டி பாராயண குழு சார்பில், திருப்பூரில் தொழில் முன்னேற்றத்துக்காகவும், மக்கள் நலன் வேண்டியும், 60வது தொடர் கந்த சஷ்டி கவச பாராயணத்தை முன்னிட்டு, முருக பெருமானுக்கு, 108 பால் குடம் எடுத்தல் நேற்று நடந்தது.
ஏராளமான பெண்கள் பங்கேற்று நல்லுார் பஸ் ஸ்டாப்பில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பால் குடத்தை எடுத்து, முக்கிய வீதி வழியாக விசாலாட்சி அம்மன் உடனமர் விஸ்வேஸ்வரசுவாமி கோவிலை சென்றடைந்தனர். தொடர்ந்து, முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம், தொடர் கந்த சஷ்டி கவசம் பாராயணம், மகா தீபாராதனை நடந்தது. அதன்பின், நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்
-
2027க்குள் ஜி.டி.பி.,யில் ஜெர்மனியை இந்தியா முந்திவிடும்; ஐ.எம்.எப்., கணிப்பு
-
மறைந்த நடிகர் மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
-
5 நாட்களில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரும்: வானிலை மையம் லேட்டஸ்ட் தகவல்
-
கூட்டணி கணக்கு குறித்து சட்டசபையில் விவாதம்!
-
காஸ் டேங்கர் லாரிகள் நாளை முதல் ஸ்டிரைக் அறிவிப்பு
Advertisement
Advertisement