வீடு சூறை இருவர் கைது
திருப்பூர்; திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, ரங்காநாதபுரத்தை சேர்ந்தவர் சேகர், 40; பில்டிங் காண்ட்ராக்டர். இவருக்கு சொந்தமான வீட்டில் அலெக்ஸ் என்பவர் குடியிருந்தார்.
வீட்டை காலி செய்வது தொடர்பாக, இருவருக்குமிடையே பிரச்னை இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் பிரச்னை ஏற்பட்டது.
இச்சூழலில் நேற்று சேகர் வெளியே சென்றிருந்த நிலையில், அலெக்ஸ், 24 தனது நண்பர் சக்திவேல், 26 உடன் மது அருந்தி விட்டு, போதையில், அரிவாளால் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து டிவி, சேர் மற்றும் வெளியே இருந்த சின்டெக்ஸ் டேங்க், குளியலறை என அனைத்தையும் சேதப்படுத்தினார்.
சேகர் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்
-
மறைந்த நடிகர் மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
-
5 நாட்களில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரும்: வானிலை மையம் லேட்டஸ்ட் தகவல்
-
கூட்டணி கணக்கு குறித்து சட்டசபையில் விவாதம்!
-
காஸ் டேங்கர் லாரிகள் நாளை முதல் ஸ்டிரைக் அறிவிப்பு
-
சென்னையை கலங்கடித்த இரானிய கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?
Advertisement
Advertisement