ஆபாசமாக வீடியோ எடுத்து பெண்ணை மிரட்டியோர் கைது

விருத்தாசலம்:பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி, நகை, பணம் பறித்த இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், பழைய காலனியை சேர்ந்தவர் சிவக்குமார், 23; திருப்பூர் பனியன் கம்பெனி பணியாளர். இவர், 30 வயது பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். அதை தன் மொபைல் போனில் வீடியோ எடுத்து மிரட்டி வந்தார்.
தன் நண்பரான புதுகாலனி குப்புசாமி மகன் வினோத்குமார், 23, என்பவருக்கு அந்த வீடியோவை அனுப்பியுள்ளார்.
தனியார் பள்ளி பஸ் டிரைவரான அவர், அந்த பெண்ணிடம் வீடியோவை காட்டி மிரட்டி, பலாத்காரம் செய்ததுடன், 50,000 ரூபாய் பணம் மற்றும் 3 சவரன் நகையை பறித்துள்ளார். நேற்று முன்தினமும் தொடர்ந்து மிரட்டவே, அப்பெண் புகாரில், கம்மாபுரம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் சிவக்குமார், வினோத்குமாரை கைது செய்தனர்.
மேலும்
-
ஏப்.,2ல் அரசு ஊழியர்களுக்கு சம்பளம்
-
2027க்குள் ஜி.டி.பி.,யில் ஜெர்மனியை இந்தியா முந்திவிடும்; ஐ.எம்.எப்., கணிப்பு
-
மறைந்த நடிகர் மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
-
5 நாட்களில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயரும்: வானிலை மையம் லேட்டஸ்ட் தகவல்
-
கூட்டணி கணக்கு குறித்து சட்டசபையில் விவாதம்!
-
காஸ் டேங்கர் லாரிகள் நாளை முதல் ஸ்டிரைக் அறிவிப்பு