வீடு புகுந்து 7 சவரன் நகை, பணம் கொள்ளை
அவலுார்பேட்டை : வளத்தி அருகே வீடு புகுந்து 7 சவரன் நகை, 48 ஆயிரம் ரூபாய் மற்றும் வெள்ளி பொருட்களைகொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வளத்தி அடுத்த பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் சம்பத், 68; ஓய்வு பெற்ற அஞ்சலக ஊழியர். இவரது மனைவி மலர்விழி, 61; இவர் 10 நாட்களுக்கு முன் சென்னைக்கு சென்றிருந்தார்.
இரவு சம்பத் மட்டும் வீட்டில் தனியாக துாங்கி கொண்டிருந்தார். அதிகாலை 3:00 மணிக்கு எழுந்து பார்த்த போது, பின் பக்க கதவு திறந்திருந்தது. உள்ளே அறைக்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு 7 சவரன் நகை, வெள்ளி பொருட்கள், 48 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது. புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கால்வாய் அமைக்கும் பணி தீவிரம் நமக்கு நாமே திட்டத்தில் நடக்கிறது
-
கம்பத்தில் ஆக்கிரமிப்பால் குறுகிய தெருக்களால் சிரமம்
-
எம்ப்ளாயீஸ் யூனியன் மாநாடு
-
பசுமாட்டின் கண்ணில் உருவான புற்றுநோய் கட்டி அகற்றம் தேனி கால்நடை மருத்துவக்கல்லுாரி சாதனை
-
கஞ்சா கடத்திய 2 பேர் கைது
-
தடையின்றி காஸ் சிலிண்டர்: எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு
Advertisement
Advertisement