100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றினாரா முகமது ஷமியின் தங்கை

லக்னோ: பிரபல கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் சகோதரி மற்றும் அவரது கணவர் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணியாற்றி சம்பளம் பெற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக முகமது ஷமி உள்ளார். காயம் காரணமாக அவதிப்பட்டுவந்த அவர் சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடி 9 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 4 பேருடன் இணைந்து முகமது ஷமி இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தத் தொடரில் இந்தியா சாம்பியன் ஆனதும் முகமது ஷமியின் தாயார் மற்றும் சகோதரி இணைந்து மைதானத்தில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் முகமது ஷமியின் சகோதரி ஷபினா மற்றும் அவரது கணவர் இருவரும் 2021 முதல் 2024 ம் ஆண்டு வரை உ.பி.,யின் அம்ரோஹா மாவட்டத்தில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணியாற்றி சம்பளம் பெற்று உள்ளதாகவும், இது குறித்த ஆவணங்கள் வெளியாகி உள்ளதாகவும் ஆங்கில மீடியாக்களில் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இது குறித்து முகமது ஷமியோ, அவரது சகோதரியோ எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.




மேலும்
-
வி.கே.பாண்டியன் மனைவி ஐ.ஏ.எஸ்., பணிக்கு விருப்ப ஓய்வு
-
மியான்மருக்கு உதவ 'ஆபரேஷன் பிரம்மா' துவக்கியது இந்தியா
-
ரம்ஜானை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டம்; சிரியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 75வது வர்தந்தி மகோத்ஸவம்; நாளை துவக்கம்
-
மொழியின் பெயரால் நாடு பிரிக்கும் போக்கு நிறுத்த வேண்டும்: ராஜ்நாத் சிங்
-
தமிழக மக்களுக்கு எதிரான துன்புறுத்தலை நிறுத்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்