கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு இ.பி.எஸ்., அஞ்சலி

திருநெல்வேலி: திருநெல்வேலியில் நேற்று காலமான அ.தி.மு.க., அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு இன்று காலை கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: எம்ஜிஆரிடம் மிகுந்த மரியாதை பெற்றவர். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் துணை பொதுச் செயலாளராக பொறுப்பேற்று திறம்பட பணியாற்றியவர். தென் மாவட்ட மக்களிடையே மிகுந்த மரியாதைக்குரியவராக திகழ்ந்தவர்.
நான் முதல்வராக பொறுப்பேற்றபோது நேரில் சந்தித்து, எனக்கு முழு ஆதரவு வழங்கியவர். 'தென் மாவட்டத்தில் உங்களுக்காக முழுமையாக துணை நிற்பேன்' என்று பலமுறை நேரில் வந்து கூறியவர்.
அவரது நினைவெல்லாம் எப்போதும் கட்சியே. அவருடைய மரணம் இயக்கத்திற்கு பேரிழப்பு.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.
மேலும்
-
ஐதராபாத் அணி பேட்டிங்; டில்லி அணிக்காக அறிமுகமாகும் கே.எல். ராகுல்
-
எம்புரான் சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்த மோகன்லால்: பிரச்னைக்குரிய காட்சிகளை நீக்குவதாக அறிவிப்பு
-
உல்லாச கப்பலில் அமேசான் நிறுவனருக்கு திருமணம்; யார் யாருக்கு அழைப்பு தெரியுமா?
-
மியான்மர் நாட்டில் பேரழிவு; நிலநடுக்கம் ஒரு பக்கம்; உள்நாட்டுப்போர் மறுபக்கம்!
-
தமிழகத்தில் ஏப்., 2, 3ல் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
-
ஒடிசாவில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து: யாருக்கும் பாதிப்பு இல்லை