தமிழகத்தில் ஏப்., 2, 3ல் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை

1


சென்னை: கோவை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஏப்.,2ம் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஏப்.,2ம் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
கோவை, நீலகிரி, ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் ஏப்., 3ம் தேதி மழைக்கு வாய்ப்பு உள்ளது.



தமிழகத்தில் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 -3 டிகிரி செல்சியஸ் குறையக்கூடும். சென்னையில் அடுத்த 48மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.


அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement