ஒடிசாவில் பயணிகள் ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டன: ஒருவர் உயிரிழப்பு

புவனேஸ்வர்: ஒடிசாவில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். எட்டு பேர் காயமடைந்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து அசாமின் காமாக்யா நகரை நோக்கி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டு இருந்தது. இந்த ரயில், ஒடிசாவின் கட்டாக் - நெருகண்டி இடையே சென்று கொண்டு இருந்த போது, ரயிலின் 11 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்கு உள்ளாகியது. இச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.
தகவல் அறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ரயில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. மாற்று ரயில் அனுப்பி வைக்கப்பட்டு, பயணிகள் அழைத்து வரப்பட்டனர்.
விபத்து காரணமாக, அந்த வழியாக செல்ல வேண்டிய மூன்று ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சொத்துத் தகராறில் தந்தையை கொன்ற மகன்: நெல்லையில் பயங்கரம்
-
உலகளாவிய அமைதிக்கு தொடர்ந்து பாடுபடுவோம்; பிரதமர் மோடி
-
உடுமலை அருகே விஷவாயு தாக்கி ஒடிசாவைச் சேர்ந்த 2 தொழிலாளிகள் உயிரிழப்பு
-
பார்லிமென்டில் திருத்தப்பட்ட வக்பு மசோதா நாளை தாக்கல்
-
குஜராத்தில் பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து; 13 பேர் பலி; 6 பேர் காயம்
-
நீலகிரி மாவட்ட வாகனங்களுக்கு இ-பாஸ் அவசியமில்லை: கலெக்டர் அறிவிப்பு
Advertisement
Advertisement