ரஷ்ய போர்க்கப்பல்கள் சென்னை வருகை; இந்திய கடற்படையுடன் கூட்டுப்பயிற்சி

சென்னை: இந்தியா - ரஷ்யா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சிக்காக, ரஷ்ய போர்க்கப்பல்கள் சென்னை துறைமுகத்திற்கு வந்தடைந்தன.
இரு நாடுகளிடையேயான கூட்டுப்பயிற்சி கடந்த 2003ம் ஆண்டு இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதிகளில் முதன்முதலாக நடைபெற்றது. அதன்பிறகு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா, ரஷ்யா கடற்படையினர் கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கூட்டுப்பயிற்சி வரும் சென்னை கடற்கரை பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக, ரஷ்ய கடற்படையின் பசுபிக் பெருங்கடல் அணியை சேர்ந்த கப்பல்கள் சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளன.
இந்தக் கூட்டுப் பயிற்சியானது இரு கட்டங்களாக நடக்கின்றன. முதற்கட்டமாக, இருநாடுகள் இணைந்து செயல்படுவது குறித்து இந்தியா, ரஷ்யா கப்பற்படை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர். அப்போது, விளையாட்டு, போட்டிகள், கலாசார நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகள் நடக்க இருக்கின்றன. 2வது கட்டமாக, அடுத்த வாரம் இருநாடுகளின் கப்பல்களும் வங்களா விரிகுடா கடலில் பயிற்சியில் ஈடுபட உள்ளன.
இந்திய கப்பற்படை சார்பில் 1970-80ல் வடிவமைக்கப்பட்ட 61 எம்.இ., கப்பல் இந்த பயிற்சியில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும்
-
விஷம் குடித்து ஜூவல்லரி கடை உரிமையாளர் குடும்பத்தினர் 4 பேர் தற்கொலை: ஆந்திராவில் சோகம்
-
சத்தீஸ்கரில் ஒரே நேரத்தில் 50 நக்சலைட்டுகள் சரண்டர்: ஆயுதங்களும் ஒப்படைப்பு
-
அதிகாரத்திற்காக அரசியலுக்கு வரவில்லை: அண்ணாமலை
-
இனி ஒரு போதும் பிரியமாட்டேன்: அமித் ஷாவிடம் நிதிஷ் உறுதி
-
சரிவில் இருந்து மீண்டது ஐதராபாத்; அனிகேத் வர்மா அபாரம்
-
எம்புரான் சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்த மோகன்லால்: பிரச்னைக்குரிய காட்சிகளை நீக்குவதாக அறிவிப்பு