கோவையில் ரூ.54 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்; போலீஸ் எஸ்.ஐ., மகன் உட்பட 7 பேர் கைது

2

கோவை: கோவையில் உயரக போதை பொருள் மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள் விற்ற, போலீஸ் எஸ்.ஐ., மகன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவையில் உயரக போதை பொருள் மற்றும் வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன் படி போலீசார் நடத்திய விசாரணையில், போலீஸ் எஸ்.ஐ., மகன் உட்பட 7 பேர் உயர்ரக போதை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடம் இருந்து ரூ. 54 லட்சம் மதிப்பிலான உயர்ரக போதை பொருட்கள் மற்றும் ரூ.26 லட்சத்தை கோவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, போலீஸ் எஸ்.ஐ., மகன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கடத்தல் சம்பவத்திற்கு பின்னணியில் இருப்பது யார் என்பது குறித்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement