'நிப்டி நெக்ஸ்ட் 50' குறியீட்டில் ஹூண்டாய்

மும்பை:தேசிய பங்குச் சந்தையில், நிப்டி நெக்ஸ்ட் 50, நிப்டி 100 மற்றும் நிப்டி 500 ஆகிய குறியீடுகளில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா பங்கு சேர்க்கப்பட்டு உள்ளது.
நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் மோட்டார் இந்தியா, கடந்தாண்டு அக்.,22ம் தேதி, புதிய பங்கு வெளியீடு வாயிலாக, இந்திய சந்தைக்குள் நுழைந்தது.
கடந்த மார்ச் 24 முதல், மும்பை பங்குச் சந்தையின் பி.எஸ்.இ.,500 உள்ளிட்ட குறியீடுகளில் சேர்க்கப்பட்டது.
இது குறித்து ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் மேலாண் இயக்குநர் உன்சூ கிம் தெரிவித்ததாவது:
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமான நாங்கள், அடுத்த முக்கிய மைல்கல்லை எட்டி உள்ளோம்.
இந்திய மூலதனச் சந்தை குறியீடுகளான நிப்டி நெக்ஸ்ட் 50 மற்றும் பி.எஸ்.இ.,500 ஆகியவற்றில் இடம்பெறுவது, ஹூண்டாய் இந்தியாவின் பங்குகள் சந்தையின் இருப்பு மற்றும் வலுவான நம்பகத்தன்மையுடன் இருப்பதை காட்டுகிறது.
இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
மேலும்
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
-
கோவில்களில் 60,000 ஹனுமான் சாலிசா புத்தகங்கள் விநியோகம்: தென்னாப்ரிக்காவில் பரவசம்
-
கடன் தொல்லையால் அவதி: சொந்த வீட்டில் கொள்ளை நாடகமாடி சிக்கிய நபர்
-
நிதி முறைகேடு குற்றம் உறுதி; பிரான்ஸ் வலதுசாரி கட்சி பெண் தலைவருக்கு தடை
-
ஜிப்லியால் முடங்கிய சாட்ஜிபிடி: சி.இ.ஓ., விடுத்த அன்பு கட்டளை!
-
ஜிப்லியில் இணைந்தார் இ.பி.எஸ்; காலத்தால் அழியாத கலையுடன் கலக்கிறேன் என பதிவு