என்.எஸ்.இ., எடுத்த முடிவால் பி.எஸ்.இ., பங்குகள் உயர்வு

புதுடில்லி:செபியின் ஆலோசனையை தொடர்ந்து, முன்பேர வர்த்தகத்தில், வாராந்திர ஒப்பந்தங்கள் காலாவதியாகும் நாளை, வியாழக்கிழமையில் இருந்து திங்கள் கிழமைக்கு மாற்றும் முடிவை ஒத்திவைப்பதாக, தேசிய பங்குச் சந்தை அறிவித்து உள்ளது.
என்.எஸ்.இ., என்றழைக்கப்படும், தேசிய பங்குச் சந்தை, நடப்பு மார்ச் மாத துவக்கதில் வெளியிட்ட அறிவிப்பில், வாராந்திர ஒப்பந்தங்கள், தற்போது வியாழக்கிழமை காலாவதியாகும் நிலையில், இனி திங்கள் கிழமைக்கு மாற்றப்படுகிறது.
மாதாந்திர, காலாண்டு மற்றும் அரையாண்டு ஒப்பந்தங்களை பொறுத்தவரை, கடைசி வியாழக்கிழமைக்கு பதிலாக கடைசி திங்கள் கிழமைக்கு மாற்றப்படுவதாக தெரிவித்து இருந்தது.
மேலும், இந்த மாற்றமானது, ஏப்., 4 முதல் அமலுக்கு வருவதாக அறிவித்து இருந்தது.
இந்நிலையில், எந்தவொரு ஒப்பந்தங்கள் காலாவதியாகும் நாள் மாற்றம் குறித்து அறிவிப்புக்கு முன்னர், தங்கள் ஒப்புதலை பெற வேண்டுமென, பங்குச் சந்தைகளுக்கு சந்தை கட்டுப்பாட்டாளரான செபி அறிவுறுத்தி உள்ளது.
செபியின் ஆலோசனையை ஏற்று, காலாவதியாகும் நாளை மாற்றும் முடிவை, காலவரையின்றி ஒத்திவைப்பதாக என்.எஸ்.இ., அறிவித்து உள்ளது.
என்.எஸ்.இ., காலாவதி நாள் மாற்றம் ஒத்திவைக்கப்பட்டதன் எதிரொலியாக, நேற்றைய வர்த்தகத்தின் போது, பி.எஸ்.இ., பங்குகள் 15 சதவீதத்துக்கு மேல் உயர்வு கண்டது. தற்போது பி.எஸ்.இ., காலாவதி நாள் செவ்வாய்க் கிழமையாக இருந்து வருகிறது.
மேலும்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
-
ஊட்டி, கொடைக்கானல் வருவோர் கவனிக்கவும்; நாளை முதல் புதிய வாகன கட்டுப்பாடுகள் அமல்
-
கோவில்களில் 60,000 ஹனுமான் சாலிசா புத்தகங்கள் விநியோகம்: தென்னாப்ரிக்காவில் பரவசம்
-
கடன் தொல்லையால் அவதி: சொந்த வீட்டில் கொள்ளை நாடகமாடி சிக்கிய நபர்
-
நிதி முறைகேடு குற்றம் உறுதி; பிரான்ஸ் வலதுசாரி கட்சி பெண் தலைவருக்கு தடை