கரும்பு ஜூஸ் கடையில் குட்கா விற்றவர் கைது

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக, சுங்குவார்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, மொளச்சூர் கருமாரியம் கோவில் தெருவில் உள் ‛கரும்பு ஜூஸ்‛ விற்பனை கடையில், போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், 4 கிலோ ‛விமல்' எனும் குட்கா பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடையின் உரிமையாளரான அதே பகுதியை சேர்ந்த அஸ்வின், 21, என்பரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement