அமைச்சர் வீடு முற்றுகை அன்பழகன் கண்டனம்
புதுச்சேரி: காங்., ஆட்சியில் ஊழல் வெளிச்சத்திற்கு வந்தபோது நாராயணசாமி முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தாரா என,அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர்,கூறியதாவது:
அரசு துறையின் அதிகாரி செய்த முறைகேட்டிற்காக, துறை அமைச்சரை பதவி விலக வலியுறுத்தி அவர் வீட்டை முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்., முற்றுகை போராட்டம் நடத்தியது அநாகரீகம்.
சி.பி.ஐ.,யின் நேர்மையான விசாரணையை திசை திருப்பும் செயல். திட்டமிட்டு அமைச்சரை அச்சுறுத்தி மனஉளைச்சலை தர வேண்டும் என்ற எண்ணத்தில் வீட்டை முற்றுகையிடுவது கேவலமான அரசியல்.
காங்., 5 ஆண்டு கால ஆட்சியில் நடந்த ஊழல், முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்தபோது அதற்கெல்லாம் பொறுப்பேற்று நாராயணசாமி முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தாரா.
தமிழகத்தில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி சிறைக்கு சென்றார். இதற்கு பொறுப்பேற்று ஸ்டாலின் பதவி விலகினாரா.
அவர் பதவி விலக வேண்டும் என தி.மு.க.,வை நாராயணசாமி வலியுறுத்தினாரா. கடந்த தி.மு.க., - காங்., கூட்டணி ஆட்சியில் நடந்த பல்வேறு ஊழல் முறைகேடுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்.
ஏனாமில் மக்கள் நலன் கருதி குப்பை பிரச்னையில் கவர்னர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர், கூறினார்.
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது