வைகை அணையில் பாசன நீர் திறப்பு

ஆண்டிபட்டி : மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து 5 நாட்களுக்குப்பின் மீண்டும் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இம்மாவட்டங்களின் பாசனத்திற்காக டிச.18 முதல் வைகை அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது. தற்போது முறைப்பாசனம் நடைமுறையில் உள்ளது. இதனைத்தொடர்ந்து மார்ச் 23ல் அணையில் நிறுத்தப்பட்ட நீர் நேற்று காலை 6:00 மணிக்கு வினாடிக்கு 650 கன அடி வீதம் மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் 58.45 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 71 அடி). அணையில் இருந்து மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது.

Advertisement