போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை: நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு
நெல்லிக்குப்பம்: வாலிபரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை கோரி நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
நெல்லிக்குப்பத்தில் நேற்று முன்தினம் ரம்ஜான் நோன்பின் 27ம் நாளை முன்னிட்டு போலீசார் பல இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். வாழப்பட்டு அருகே காவலர்கள் மாயவேல், அறிவழகன் ஆகியோர் வேகமாக பைக்கில் வந்த ஷர்பியா நகரை சேர்ந்த முகமது கவுசிக்கை,22; சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர்.
அவர் நிறுத்தாமல் சென்றதால் போலீசார் தாக்கினர். இந்நிலையில், முகமது கவுசிக்கை லத்தியால் தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்றிரவு நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது
Advertisement
Advertisement