காரசாரமான சிறுநெல்லி ஊறுகாய்

கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமான், நீண்ட ஆயுள் தரும்நெல்லிக்கனியை அவ்வையாருக்கு பரிசாக வழங்கி னார் என்பது வரலாறு. அப்படிப்பட்ட கனியை நாமும் உண்டு, நீண்ட காலம், நோய் நொடியின்றி உயிர் வாழ்வது நமக்கு கிடைத்த பாக்கியம் ஆகும்.
நெல்லிக்காயில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று பெரிய நெல்லிக்காய்; மற்றொன்று சிறு நெல்லிக்காய். இவை இரண்டிலும் சம அளவில் சத்துக்கள் உள்ளன. இந்த சிறு நெல்லிக்காயை சாப்பிடுவதையே பெரும்பாலானோர் விரும்புவர்.
பொதுவாக பலரும் உப்பு, மிளகாய் துாள் போட்டு சாப்பிடுவர். இப்படி சாப்பிடும் போது, அதிகமாக சாப்பிட முடியாது. ஆனால், அதுவே சிறு நெல்லிக்காயில் ஊறுகாய் செய்து சாப்பிட்டால், அதிகமாகவும் உண்ண முடியும்.
அதே சமயம் சாப்பாட்டுக்கு, தொட்டுக்கவும் வைத்துக் கொள்ளலாம். இதை பல மாதங்கள் வைத்து கூட சாப்பிடலாம்.
செய்முறை:
ஒரு வாணலியில் வெந்தயம், கடுகு சேர்த்து பொன் நிறமாகும் வரும் வரை வறுத்து எடுத்து கொள்ளவும். இதை சற்று நேரம் ஆற வைத்து, மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
அதே வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து தாளித்து கொள்ளவும். இதில், கழுவி வைத்த நெல்லிக்காய்களை போட்டு தாளிக்கவும்.
நெல்லிக்காயின் நிறம் மாறியதும் குழம்பு மிளகாய் துாள், பெருங்காய் துாள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பச்சை வாசனை போன பிறகு, அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்றாக கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும் நேரத்தின் போது, எது பற்றியும் யோசிக்காமல் உடனடியாக வாணலியை அடுப்பில் இறந்து இறக்க விடவும்.
- நமது நிருபர் -
மேலும்
-
பிரதமர் மோடியின் தனிச் செயலாளராக ஐ.ப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமனம்: யார் இவர் தெரியுமா?
-
எம்புரான் படத்தில் முல்லைப்பெரியாறு அணை பற்றி சர்ச்சை கருத்து; தடை விதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
ஜூன் வரை வழக்கத்தை விட அதிக வெப்பம் இருக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
-
விடுதி மாணவர் உணவுப்படியை ரூ.5000 ஆக உயர்த்துங்கள்; தினமலர் செய்தியை சுட்டிக்காட்டி அண்ணாமலை வலியுறுத்தல்
-
விசைத்தறி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
கும்பமேளா புகழ் மோனலிசாவுக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வழக்கில் கைது