பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தாசில்தார் அதிரடி கைது

கூடலூர்: நீலகிரி மாவட்டத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த தாசில்தார் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
கூடலூர் கலால் மதுவிலக்கு பிரிவு தாசில்தாராக இருப்பவர் சித்தராஜ்(54). இவர், கூடலூர் மண்வயல் கோழிகண்டி பகுதியில் நாட்டுக்கோழி மற்றும் அதன் முட்டைகள் வாங்க அடிக்கடி சென்று வருவது வழக்கம்.
சம்பவத்தன்று அங்கு நாட்டுக்கோழி முட்டை வாங்குவதற்காக அவர் சென்றுள்ளார். அங்கிருந்த 42 வயது பெண், தற்போது முட்டை இல்லை என, தெரிவித்துள்ளார். அப்போது சித்தராஜ், திடீரென அந்த பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து பாலியல் தொல்லை செய்துள்ளார்.
பெண்ணின், சத்தம் கேட்டு உறவினர்கள் வருவதை பார்த்த சித்தராஜ், அங்கிருந்து தப்பியுள்ளார். இது தொடர்பாக, கூடலூர் போலீசில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு சித்தராஜை கைது செய்தனர்.







மேலும்
-
பெண்கள் பெயரில் பத்திரப்பதிவுக்கு கட்டண சலுகை; யார் யாருக்கு பொருந்தும்?
-
இரு ஆசிரியர்கள் மீது பெண் வன்கொடுமை வழக்குப்பதிவு: விளக்கம் கேட்டு இணை இயக்குனர் 'நோட்டீஸ்'
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: லக்னோ அணி பேட்டிங்
-
இந்திய-சீன உறவு இன்னும் நெருக்கம் ஆகணும்: சீன அதிபர் ஜின்பிங் விருப்பம்
-
நான் யோகி; அரசியல் எனது முழு நேர வேலையல்ல: சொல்கிறார் உ.பி., முதல்வர்
-
மானியம் விடுவிக்க ரூ.12 ஆயிரம் லஞ்சம்: நாகை மாவட்ட தொழில் மைய மேலாளர் கைது