ஈரான் மீது குண்டுவீசுவேன்; அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: அணு ஆயுத உற்பத்திக்கு தடை விதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தால், ஈரான் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க உலக நாடுகள் கொண்டு வந்த ஒப்பந்தத்தில் ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ஒப்பந்தம் பலவீனமானதாகக் கூறி, அமெரிக்க அதிபராக டிரம்ப் முதல்முறையாக பதவியேற்ற பிறகு, கடந்த 2018ம் ஆண்டு அந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது.
அதன்பிறகு, ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்த உறுதிமொழிகளை ஈரான் மெல்ல மெல்ல மீறத் தொடங்கியது. அந்த வகையில், அணு ஆயுத உற்பத்தியை அதிகரித்து வருவதாக ஈரான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்களை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.
இதனிடையே, ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதை தடுக்க, புதிய ஒப்பந்தத்தை கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இது தொடர்பாக ஈரானுக்கு அவர் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், 'அணு ஆயுத உற்பத்திக்கு தடை விதிக்கும் விதமான, புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தொடர்பாக ஈரான் பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டும். தவறினால், ராணுவத்தை பயன்படுத்த வேண்டியிருக்கும்,' என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், அணு ஆயுத உற்பத்திக்கு தடை விதிக்கும் ஒப்பந்தத்திற்கு உடன்பட மறுத்தால், ஈரான் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கு முன்பு அவர்கள் பார்த்திடாத வகையில் தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், ஈரான் மீது 2வது கட்ட வரிவிதிப்புகளை சுமத்த வேண்டி இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
ஆனால், அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது. இது, உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்
-
பெண்கள் பெயரில் பத்திரப்பதிவுக்கு கட்டண சலுகை; யார் யாருக்கு பொருந்தும்?
-
இரு ஆசிரியர்கள் மீது பெண் வன்கொடுமை வழக்குப்பதிவு: விளக்கம் கேட்டு இணை இயக்குனர் 'நோட்டீஸ்'
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: லக்னோ அணி பேட்டிங்
-
இந்திய-சீன உறவு இன்னும் நெருக்கம் ஆகணும்: சீன அதிபர் ஜின்பிங் விருப்பம்
-
நான் யோகி; அரசியல் எனது முழு நேர வேலையல்ல: சொல்கிறார் உ.பி., முதல்வர்
-
மானியம் விடுவிக்க ரூ.12 ஆயிரம் லஞ்சம்: நாகை மாவட்ட தொழில் மைய மேலாளர் கைது