மளிகை கடையில் சிக்கிய பாம்பு

வேப்பூர், : வேப்பூரில் மளிகைக் கடை கதவில் சிக்கிய பாம்பை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

வேப்பூரைச் சேர்ந்தவர் சரஸ்வதி, 45; இவர் நேற்று காலை 11:00 மணிக்கு தனது மளிகை கடையில் இருந்த போது, கதவில் 3 அடி நீளமுள்ள சாரை பாம்பு சிக்கி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

தகவலறிந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சதாசிவம் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பாம்பை மீட்டு காட்டுமயிலுார் காட்டில் விட்டனர்.

Advertisement