சத்தியில் பண்ணாரி அம்மன் உலா



சத்தியில் பண்ணாரி அம்மன் உலா

சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியம்மன் கோவில் அம்மன் உற்சவர் திருவீதி உலா, கடந்த மாதம், ௨௬ம் தேதி முதல் நடந்து வருகிறது.
சத்தியமங்கலம் வடக்கு பேட்டை, கடைவீதிகளில் நேற்று முன்தினம் உலா வந்தது. இந்நிலையில் நேற்று ரங்கசமுத்திரம், திம்மையன்பதுார் பகுதிகளில் உலா சென்றது. இன்று காலை பட்டவர்த்தி, அய்யம்பாளையம், வடவள்ளி, புதுக்குய்யனுார், பசுவபாளையம், புதுபீர் கடவு, பட்ரமங்கலம், ராஜன் நகர் வழியாக இரவு கோவிலை அடைகிறது.
திருவீதி உலாவின் போது பொதுமக்கள் தேங்காய் பழம் படைத்தும், கற்பூரம் ஏற்றியும், சப்பரத்தின் முன் படுத்தும் தரிசனம் செய்தனர்.

Advertisement